விடைப்பெறுகிறேன் நண்பர்களே...!!!

>> Saturday, February 27, 2010

         மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே கல்லூரிக்கு அவுங்க வந்தாங்க.., இந்தா புடி அப்டின்னு ஒரு வேலையும் குடுத்தாங்க.., படிப்பு முடிஞ்சு ஒரு மாசத்துல வந்துடனும் அப்டின்னு உரிமையா சொல்லிட்டு போனாங்க..,

       கடைசி பரிட்சைக்கு முதல் நாள் அந்த ஓலை வந்துச்சு.., படிச்ச ஒடனே நீங்க ஒண்ணும் வேலைக்கு வர வேண்டான் நாங்க சொல்லி அனுப்புவோம் அப்போ வந்தா போதும் அப்புடின்னாங்க.., ஏன்னு கேட்டா தொழில் மொடக்கம் அப்புடின்னாங்க.., மொடக்கம் தீர்ந்தோன்ன கூப்பிடுவோம் அப்புடின்னாங்க.., கூப்பிட்டுருவிங்களா ??? கண்டிப்பா ......,

      வீட்ல சும்மா தான இருக்க அப்டின்னு சொந்த காரங்க கல்யாணம் , காது குத்துக்கெல்லாம் வீட்ல அனுப்பி வைச்சாங்க..,அங்க போன இன்னும் வீட்ல தான் இருக்கியளான்னு சிரிச்சுட்டே கேக்க ஆரம்பிசிட்டாங்க.,டீ குடிக்க கடைக்கு போனாலும் , ஊருக்கு போக பஸ்க்கு நின்னாலும் இதே கேள்வி தான் ..,

     என்ன செய்யலாம்.., மறுபடியும் அவுங்கள்ட்ட கேட்டேன் எப்போ கூப்புடுவிங்க...,சீக்கிரமா அப்புடின்னாங்க.., அங்க வேல பாக்குற சீனியர் கிட்ட கேட்டா நம்புங்க கூப்பிடுவாங்க அப்புடின்னாங்க.., அது வரைக்கும் டீ கடைக்கும் , கல்யாண வீட்டுக்கும் போகாமையா இருக்க முடியும்..,அப்புடி தான் இந்த வேலைக்கு வந்தேன்., மெயில் அனுப்பனும் அவ்வளவு தான் வேல.., மெயில் அனுப்பிட்டு சும்மா இருக்குற நேரத்துல அறிமுகமானது தான் தான் இந்த பதிவுலகம் வாசிக்க ஆரம்பிச்சது இங்க தான் .., உலக சினிமா அறிமுகமானதும் இங்க தான்.., இதையெல்லாம் விட முக்கியமானது நண்பர்கள் .., என்னுடைய 22 வருட வாழ்க்கையில் இரண்டு நாட்களை மட்டுமே தமிழக எல்லைக்கு அப்பால் கழித்துள்ளேன் ஆனால் உலகின் வெவ்வேறு மூலைகளில் கூட என்னை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்..,இதை விட மகிழ்ச்சி தருவது வேறெதும் இல்லை எனலாம்..,

          இப்போ மறுபடியும் அவுங்கள்ட்ட கேட்டேன் எப்போ கூப்புடுவிங்க..., இப்பவும் சொன்னாங்க சீக்கிரமா அப்புடின்னு.., முன்னால கேட்ட அதே சீனியர்கிட்டலாம் கேட்டேன் ஆனா இப்போ அவுங்க மாத்தி சொன்னாங்க "இதயே நம்பாத .., வேற வேல கிடைச்சா போய்டு " அப்புடின்னு..,அவுங்க சொல்ரதும் சரி தான் இன்னும் மூணு மாசத்துக்கு தான நாங்கெல்லாம் Fresher..,

        ஆகவே.., இந்த மெயில் அனுப்பும் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.., சென்னை வந்து வேலை தேட போகிறேன்..,சென்னையில் கல்லூரி நண்பர்களுடன் தங்குவது என்று முடிவு செய்தாகிவிட்டது யாருடன் என்று முடிவு செய்யவில்லை., அப்படி கூட தங்க போகும் நண்பனிடம் கணிணியும் இணையமும் இருந்தால் உடனே பதிவுலகத்துக்கு வருவேன் என்றும் இல்லையெனில் ஒரு வேலைக்கு சேர்ந்து அங்கே இணையம் பயன்படுத்தும் உரிமையும் வந்த பிறகோ இல்லையெனில்  என்னுடைய சம்பாத்தியத்தில் லேப்-டாப்போ கணிணியோ வாங்கிய பிறகோ பதிவுலகத்துக்கு வருவேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன்..,


      சிறிய அளவிலான வாசிப்பு அனுபவம் கூட இல்லாத என்னையும் 73 பேர் ஃபாலோ செய்கிறார்கள்..,அந்த அளவிற்க்காவது என்னை எழுத ஊக்கப்படுத்திய அண்ணண்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூறிய படியே விடைப்பெறுகிறேன் விரைவில் திரும்புவேன் என்ற நம்பிக்கையோடு.....,
.
.

Read more...

யாராவது சொல்லுங்க...,

>> Friday, February 26, 2010


பேரு என்ன ??

தெரியாது

ஊரு என்ன ??

தெரியாது

வயசு என்ன ??

தெரியாது

தேட போறியா ??

ஆமா

என்ன காதலா ??

இருக்கலாம்


லூசா நீ ??

ஏண்டா இப்புடி கேக்குற...,

வேற என்ன கேக்க சொல்ற ??

அவள பத்தி சொல்றேன்..,

வேற வேல இருக்கு ??

அப்போ அவள பத்தி சொல்லு

அதுக்கு வேற ஆள பாரு.

எனக்கு யார தெரியும்??

இதையும் ஒரு பதிவுன்னு இவ்ளோ நேரம் படிக்கிராங்களே அவுங்கள கேளு சொல்லுவாங்க..,

டிஸ்கி :- மகாஜனங்களே ..., நல்லா சொல்லுங்க பின்னோட்டத்துல ...,
.
.

Read more...

காணாமல் போகும் காதல் தேவதைகள்

>> Tuesday, February 16, 2010


முழு இரவையும்
முழுதாய் விழுங்கும்
அத்தனை பயணங்களிலும்
கைப்பையை அணைத்தப்படி
கண்ணாடி ஜன்னலில்
சாய்ந்தப்படி உறங்கும்
தேவதையை ஒன்றை
பார்க்கிறேன் ..,

அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,

டிஸ்கி :- நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,
.
.

Read more...

அஜித்தும் விஜய்யும் பின்ன ...நானும்

>> Wednesday, February 10, 2010

   
         என்னோட போன பதிவுக்கும் போன பதிவுக்கு வந்த பின்னோட்டங்களில் முக்கியமானது . இது வரை என்னுடைய வாழ்க்கையில் இது வரை என் வாழ்க்கையில் யாரும் என்னை பார்த்து கேட்காத கேள்வி " நீங்க விஜய் ஃபேனா ?? ",யாரும் இந்த கேள்வியை கேள்வியை யாரும் கேட்டதில்லை ஏனெனில் கேட்கபடி யாரையும் விட்டதில்லை.நான் எப்போது சினிமா பத்தி பேசவும் விவாதிக்கவும் தொடங்கினேனோ அப்போ இருந்தே விஜயை கிண்டல் அடிப்பதையும் கேலி செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
     அதே போல் ஒரு காலத்தில் நானும் அந்த கேள்வியை கேட்ட நண்பர்கள் போலவே தீவிரமான அஜித் ரசிகன்.அதன் பின்பு கல்லூரிக்காலத்தில் யாருக்கும் ரசிகனாய் இல்லாமல் இருந்ததில் ஒரு வசதி இருந்தது யாருடைய தலைவனையும் கிண்டல் அடிக்கலாம் நமக்கு தான் தலைவரே கிடையாதே ..,அப்பவும் எங்களால் அதிகம் கிண்டல் அடிக்க படும் நடிகர் விஜய் மட்டுமே..,
     நான் இப்போ அஜித் ரசிகன் இல்லாவிட்டாலும் அவரை எனக்கு பிடிக்கும் . பில்லா வந்த சமயத்தில் அவருடைய பேட்டி ரொம்ப பிடித்து இருந்தது.., வாலி வந்த சமயத்தில் " அழகாய் இருக்கும் ஆணுடன் சேர்ந்து சாப்பிடவும் பேசவும் நிறைய பெண்கள் இருப்பார்கலள் ஆனால் செட்டில் ஆகாத ஆணை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் " என்று முதிர்ச்சியோடு பேட்டி கொடுத்த அஜித்தை எனக்கு பிடிக்கும்.
         இப்போது கூட கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் எல்லாரும் ஜால்ரா அடித்து கொண்டிருக்க தன் மனதில் பட்டதை பேசி இருக்கிறார்.இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே hype கொடுக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.அதன் பிரதிபலிப்பு தான் கிங் ஆஃப் ஓப்பனிங் போன்ற பட்டங்கள்.., இது மட்டும் அல்ல எனக்கு விஜயை கிண்டல் பண்ணி எவ்வள்வு எஸ்.எம்.எஸ் வருகிறதோ அதே அளவிற்கு அஜித்தை புகழ்ந்தும் வரும் அவை உங்கள் பார்வைக்கு...,
 " கேன்ஸ் திரைப்பட விழாவில் பில்லா படத்தின் தீம் மியூசிக்குக்கு சிறந்த தீம் மியூசிக்குக்கான இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது..., முதல் பரிசை வாங்கிய திரைப்படம் Mission Impossible "
"அஜித்தின் சாதனைகள் - 
  மொத்த படங்கள் - 49
ப்ளாக் பஸ்டர்- 8
சூப்பர் ஹிட் - 13
ஹிட் -18
ஆவேரேஜ் - 9
பில்லா - 150 கோடி வசூல் (Only Behind Sivaaji - 160 கோடி)
 "
"அஜித் 2010-ற்க்கான F1 பந்தயதிற்க்காக பங்கேற்க்க போகிறார்.இந்த சாதனையை செய்யும் இரண்டாம் இந்தியன் இவரே- தல போல வருமா "
இது போல வெட்டி பில்ட்- அப் வேறு யாருக்கும் அவர்களின் ரசிகர்களால் கொடுக்க படுவதில்லை இனி நா சொல்ல ஒன்னும் இல்ல நீங்களே சொல்லுங்கோ...,
.
.

Read more...

பர்ஸ் பழுத்த சூடு

>> Tuesday, February 09, 2010


நாம் நடந்த கடற்கரையில்
தனியாய் நடக்கும் போதும்
சுடுகிறது பர்ஸ்
பழுத்த சூடு..,


நீ வழியெங்கும்
சிதறிய புன்னகையை
சேர்த்து வைக்கிறேன் மாச
கடைசியில் அடமானம் வைக்க..,

இணையத்தில் அமரும்
போதெல்லாம் உன்
பெயரையே பார்க்கிறேன் சொன்னால்
நம்ப மறுக்கிறார்கள் உன் பெயர்
கூகுள் என்று..,

டிஸ்கி :- காதலர் தினம் வருதாமே அதான் நம்ம ஸ்டைல்ல காதல் சாம்பார் (எவ்ளோ நாள் தான் ரசமே சொட்டும் ) சொட்ட சொட்ட ..., ஹி ஹி ....,
.
.

Read more...

யார் கிங் ஆஃப் ஓப்பனிங் - ஒரு " அசல் " ஆராய்ச்சி

>> Monday, February 08, 2010

        
        அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை அஜித் துறந்து விட்டாலும் அவருக்கு இன்னும் செல்ல பெயர்களுக்கு  குறைவே கிடையாது.., தல , கிங் ஆஃப் ஓப்பனிங் , ஆசை நாயகன் , காதல் மன்னன் என நிறையவே உண்டு.இவற்றுள் ஆசை நாயகன் , காதல் மன்னன் , தல ஆகிய பட்டங்கள் எல்லாம் அவர் நடித்த படத்தின் பெயரையோ இல்லை அவரது கதாபாத்திரத்தின் செல்ல பெயரையோ குறிக்கின்ற்ன.., ஆனால் இந்த கிங் ஆஃப் ஓப்பனிங் பட்டம்?? அதற்க்கு என்ன அர்த்தம்??

           எனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் படம் வெளியாகும் முதல் நாள் அல்லது முதல் வாரம் அதிக வசூலை கொடுக்க கூடிய நடிகர் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.  நான் அப்படி அர்த்தப்படுத்தியது சரியெனில் உண்மையிலேயே அஜித்தா கிங் ஆஃப் ஓப்பனிங் ?? . தஞ்சாவூரில் வில்லு ரிலீசான இரண்டாம் நாள் டிக்கெட் கிடைக்க வில்லை(நாலாவது நாள் காத்து வாங்கியது வேறு விஷயம் )  ஆனால் ஆழ்வார் ரிலீஸான அன்று மாலையே தியேட்டர் காத்து வாங்கியது.
இதன் மூலம் விஜய் தான் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று காமெடியெல்லாம் பண்ணவில்லை . அஜித்தை விட விஜய் முன்னனியில் இருக்கிறார் என்றே சொல்கிறேன். மேற்கூறிய உதாரணம் தஞ்சாவூரில் நடந்தது மட்டுமே மற்ற ஊர்களில் நிலவரம் எனக்கு தெரியாது..,

               
         கிங் ஆஃப் ஓப்பனிங் என்ற பட்டம் படத்தின் தரத்திற்க்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாமல் தன் பெயருக்காகவே கூட்டம் சேர்க்கும் நடிகருக்கே பொருத்தமாய் இருக்கும்.  பாபா படத்தின் தரம் அனைவரும் அறிந்ததே ஆனாலும் பத்து நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது.., அது தான் ரஜினியின் வீச்சு இன்றும் அதே வீச்சு அவருக்கு இருப்பதாகவே அறிகிறேன். அப்படியானால் அவர் தானே இன்றும் கிங் ஆஃப் ஓப்பனிங் ??? அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதால் இந்த பட்டத்தை டிரான்ஸ்பர் செய்து விட்டரா என்ன??

டிஸ்கி :- யாராவது புள்ளி விவரத்தோட  பதில் சொல்லுங்கப்பா....,
.
.

Read more...

என்னை போன்றவர்களுக்காக... இன்றே கடைசி...

>> Wednesday, February 03, 2010

        2009-ம் ஆண்டு BE/B.Tech மற்றும் MCA முடித்தவர்களுக்கான WALk In Interview கோயம்புத்தூரில் நடைபெறுகிறது... அதற்க்கான விவரஙகள் கீழே...
Hi Guys,

We are organizing the combined campus recruitment process for the 2009 Batch students on 6th February 2010 (Saturday) at our campus.


Company Name: Accenture India, Bangalore

Job Position: Associate Software Engineer

Key Responsibilities:
• "Application Maintenance" is Large/ Medium/ Small enhancements, Production Support, Infrastructure support for mission critical software applications/ packages across technologies (like J2EE, SAP, Mainframe etc.,) across functional domains.
• They will be deployed in maintenance engagements (Major/ Minor enhancements, Testing, Break/Bug fix, Server Administration etc.,) for the first 24 months - across all technologies C++, .NET, Mainframe, Testing, SAP, J2EE etc.

Eligibility Criteria:
B.E / B.Tech / MCA (All disciplines except fire and safety, Biomedical, Pharmacy, Textile & Fashion)
2009 Batch students only
• Minimum of 60 % and above aggregate in current course.
• No current backlogs.
• Has not taken an Accenture process for the last 6 months.
http://www.ChetanaS.org
Selection Procedure: The Selection Procedure would consist of:
• Presentation
• Written Test (Aptitude)
• GD
• HR Interview (07 February 2010)
• Final Interview (07 February 2010)

Mandatory Documents for the Off Campus Event:
• College ID card
• 2 passport size photographs
• PAN card/PAN acknowledgment slip
• Resume
• All mark sheets/consolidated mark sheet
• Provisional certificate/course completion certificate

Walk-In Date: On 6th February 2010 (Saturday) : 08:30 AM
http://www.ChetanaS.org
Venue:
Auditorium,
Kumaraguru College of Technology,
Saravanampatti,
Coimbatore,
Tamilnadu

http://www.ChetanaS.org
Registration:
Interested students are asked to send their resumes to offcampuskct (at) gmail.com on or before 3rd February 2010.
http://www.ChetanaS.org
There is NO Hall ticket or Registration confirmation mail. After sending resume, you can come and attend the recruitment process on 6th February 2010.

 [source :- http://www.chetanasforum.com/index.php?showtopic=38801 ]
.
.

Read more...

அர்த்தம் - சத்தம் - ரத்தம்

>> Tuesday, February 02, 2010

 


அர்த்தத்திற்கு ஏது அர்த்தம்
இதயம் உருகும் சத்தம்
ஏதோ செய்கிறேன் நித்தம்
அள்ள வேண்டும் மொத்தம்
சொல்ல துடிக்குது ரத்தம்
தலைக்கு ஏறிடுச்சு பித்தம்...,

ஏய் டண்டணக்கா ... டனக்கு நக்கா... 

டிஸ்கி :- யாரவது அர்த்தம் சொல்லுங்கப்பா....,
.
.

Read more...
Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP