என் கதையும் எதிர் வினையும்...,
>> Thursday, December 31, 2009
நான் இந்த கதையை எழுதி என்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பிறகு என்னுடைய சாட் லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் என்னுடைய கதையை படித்து விட்டு கருத்து சொல்லுமாறு அழைப்பு விடுத்தேன் முதல் எழுத்து எழுதிய குழந்தை அனைவருக்கும் எழுதிக்காட்டுவது போல .., கிட்டத்தட்ட அனைவரும் படித்து விட்டு கருத்து சொன்னார்கள்.., கிட்ட தட்ட அனைவரும் அதில் இருந்த குறைகளை சுட்டி காட்டினார்கள் ..,The Identity போன்ற படங்களை பார்த்து விட்டு விளக்கமாக விமர்சனம் போடும் ஹாலிவுட் பாலா,எல்லா படங்களையும் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஜெட்லி உட்பட பலரும் சொன்னது புரியவில்லை.எனக்கு தெரிந்து நா சொல்ல வந்ததை முழுமையாக புரிந்து கொண்டது நான் மட்டுமே..,
அப்புறம் இது நான் லினியர் கதை அப்படின்னு நெனச்சேன் அதும் இல்லையாம் கேபிள் அண்ணன் சொன்னார். நிகழ்வு கதைகளை எழுதி பழகுமாறு போஸ்டன் ஸ்ரீராம் சொன்னார்.இந்த கருத்துக்கள் என்னை கண்டிப்பாய் ஊக்க படுத்தும் மற்றும் இந்த கருத்துக்களால் எனக்கு பெரிதாய் ஒன்றும் வருத்தம் இல்லை முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையும் முதல் முறை மிதிவண்டி ஏறும் சிறுவனும் முதல் முறை காதலிக்கும் விடலையும் தவறி விழுவதில் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை விழாமல் இருந்தால் வேண்டுமானால் ஆச்சர்யப்படலாம்.எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு என்னுடைய அடுத்த கதை குறைந்தது உங்களுக்கு புரியும் படி இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்...
போன வரியுடன் முடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தனை ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு இன்னொன்றும் வந்தது.., ஆணை திறந்ததும் ஆற்றில் மிதக்கும் மலத்தை போல "என்ன ம******************************
கோவி கண்ணனை பார்த்து கத்துக்கோடா,சுமஜ்லாவை பார்த்து கத்துக்கோடா,சந்தனமுல்லையை பார்த்து கத்துகோடா, விதூஷைப்பார்த்து கத்துக்க்கோடா,அதிஷாவைபார்த்து கத்துக்கோடா, நர்சிம்மை பார்த்து கத்துக்கோடா,டோமர்,
கதை எலுதுறானாம் வெள்று,முதல்ல படி,அப்புறம் எலுது,எல்லாம் எடுத்தவுடனே இப்புடி *************************************** ???" . * போட பட்ட பகுதிகளை பிரசுகரிக்க விரும்ப வில்லை. எனக்கே தெரியும் மேல்குறிப்பிட்ட எவர் போலவும் இப்பொழுது என்னால் எழுத முடியாது அதை பண்பான வார்த்தைகளால் சொல்லி இருக்கலாம் .ஆகவே இந்த பதிவையும் படிக்குமாறு அனைவருக்கும் சுட்டியை அனுப்ப போகிறேன்.., நீங்களே சொல்லுங்கள்..,இப்பொழுது எனக்கு எழுத தகுதி இல்லை என்றால் சொல்லுங்கள் அந்த தகுதி வரும் போது எழுதி கொள்கிறேன் இப்போது பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொள்கிறேன்...
.
.


































