திரும்ப கிடைக்குமா...

>> Friday, November 27, 2009

நவம்பர் 27...
மாவீரர்  தினம்..



தலைவர் தோன்றுவார்..
இல்லை இல்லை
தளபதி தான்
உரை வாசிப்பார்
என மாறி மாறி செய்தி போட்டு
சுழற்சியை கூட்டி
வருமானத்தை பெருக்கும்
ஒரு துரோக கூட்டம்...

யாரும் வரமாட்டார்கள்...
அகிலத்தின் அதிசிறந்த
ஆயுத போராளிகளை
அடிவேர்கூட இல்லாமல் அழித்துவிட்டோம்..
என கொக்கரிக்கும்
ஒரு ஈன கூட்டம்...


எது உண்மையானால் என்ன...
அடிமையனர்வர்களின்
சொந்த பொருட்களும்
சொந்த பந்தங்களும்...
கற்பழிக்க பட்ட
தமிழச்சியின்  மானமும்...
இறந்து விட்ட
சகோதர்களின் உயிரும்...
திரும்ப கிடைக்குமா...
.

Read more...

நீ... நல்லவனா கெட்டவனா...

>> Thursday, November 26, 2009





நீ...
நல்லவனா கெட்டவனா...
எமக்கு தெரியாது...

நீ...
தமிழின தலைவனா...
இல்லை தான் குடும்பமே
தமிழினம் என்போரா...
எமக்கு தெரியாது...

நீ..
கொள்கைக்காக செய்தாயா..
இல்லை கொலை
வெறிபிடித்து செய்தாயா...
எமக்கு தெரியாது...

நீ...
மண்மீது இருக்கிறாயோ...
இல்லை விண்ணோடு சென்றாயோ...
எமக்கு தெரியாது...


ஆனால்...
ஓர் கோடை காலத்தின் மாலை நேரம் ..
நீண்ட நேரமாய் பேருந்து வராததால்
காத்திருந்த கூட்டத்தை நோக்கி ஓர் குரல்
"பிரபாகரன கொன்னுடாங்க பஸ்லாம் வராது " என்று...
கருதருத்த களைப்போடு காத்திருத்த கிழவி ஒருத்தி
சட்டென்று சொன்னாள்
"என்ன ராசா சொல்லுற அவனெல்லாம்
அம்புட்டு சாமநியத்துல கொன்னுட முடியுமா
அப்டி பண்ணி புட்டா ஊரே கொந்தளிச்சிடாது "
மேற்கூறிய கேள்விகளுக்கான பதில்
எமக்கு தெரிய தொடங்கியது...

Read more...

அய்யோ ராமா என்ன ஏன் இப்டி படுத்துற...

>> Wednesday, November 25, 2009

               இன்று காலை வேலை நிமித்தமாக கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி போவதற்காக கோவை  பஸ் ஸ்டாண்ட் வந்துசேர்ந்தேன் .ரெண்டு பஸ் தயாராக இருந்ததால் எந்த பஸ்-ல் படம் போடுறாங்களோ அதுல போலாம் என்று முடிவு செய்தேன்(விதி யாரா விட்டுச்சு..!!).சக்சஸ் .. சக்சஸ்... ஒரு பஸ்ல படம் ஓடுது அதும் எதோ சண்ட படம் போல டும்.. டம்..அப்டின்னு சத்தம் கேட்டுச்சு ...சந்தோசமா ஏறி உக்காந்தா என்ன படம் அப்டினே தெரியல.. பஸ் ஸ்டார்ட் ஆனதும் ஹீரோவா கண்டு பிடிச்சுட்டேன் .. ஓடி கொண்டு இருந்தது காதலில் விழுந்தேன் படத்தின் இறுதி காட்சி..டரியல் ஆகிவிட்டேன்..

           என்ன இருந்தாலும்   மனதுக்குள் ஒரு சந்தோஷம் படம் தான் 5 நிமிஷத்துல முடிய போகுதே அதான் . ஆனா அந்த 5 நிமிஷம் அப்பா சாமி முடியலடா... அட கருமாந்தரம் பிடிச்சவுன்களா நடிக்க வரலன்னா விட்டு தொலைக்க வேண்டியது தானடா...இதுக்கு நம்ம விஜய் எவ்வளவோ பரவால்லங்க நடிக்க வரல அப்டின்னாலும் அவருக்கு ஒழுங்கா வர டான்ஸ் , பஞ்ச் டயலாக் (?) இப்டி எதாவது தான் பண்ணுவாரு இப்டி நடிக்க ட்ரை பண்ணி நம்மள கொல பண்ண மாட்டாரு ஆனா இவனுங்க ஹம்ம் ....ஒரு வழியா படம் முடிஞ்சுது.. படம் போடாமலே இருந்தா தேவலாம் அப்டின்னு நெனைச்சப்போ கண்டக்டர் அதே d.v.d -ஐ மறுபடியும் ப்ளே பண்ணினார்..மறுபடியும் அதே படமா !!! அங்க தாங்க ஒரு ட்விஸ்ட் ... கல்பாத்தி.எஸ்.அகோரம் வழங்கும் அப்டின்னு போட்டாங்க சரி வேற படம் அப்டின்னு நிமிர்ந்து உக்காந்தா .. மறுபடியும் ஒரு ட்விஸ்ட்.. என்னடா அப்டின்னு கேக்குறிங்களா.. போட்டது மாசிலாமணி (மாசிலாமணி & காதலில் விழுந்தேன் என்ன ஒரு collection )...


நான் இதுக்கு முன்னால மாசிலாமணி பாத்தது இல்ல .. பாக்காத அப்டின்னு ஹமாம் விளம்பரம் கணக்கா நெறைய பேர் சொன்னதால ஒரு நடுக்கதோடையே படம் பாக்க ஆரம்பிச்சேன்.. தமிழ் சினிமா ரொம்ப முன்னேறிடுச்சுங்க வழக்கமா தமிழ் ஹீரோயின் தான் லூசா இருப்பாங்க இந்த படத்துல எல்லா கதா பாத்திரங்களும் அப்படியே.. இடுக்கு முன்னால இப்படி ஒரு பாத்திர படைப்பை நரசிம்மா என்ற காவியத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன்.இதனால மட்டும் தமிழ் சினிமா முன்னேறிட்டு அப்டின்னு சொல்லல வழக்கமா நம்ம ஆளுங்க ஹாலிவுட் படத்துலேந்து தான் சுடுவாங்க நம்ம டைரக்டர் பழைய தமிழ் படங்களையே சுட்ருக்கார் இப்போ சொல்லுங்க தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு முன்னேரிட்டுல ...

            படத்தோட ஆரம்பத்துல ஒருத்தன போட்டு அடிக்கிறார் ஹீரோ அதுக்காக அவர புடிச்சு கோர்ட்ல நிறுத்துனா timing காமெடி பண்றேன்னு ஏதேதோ   பேசினார் அந்த சிரிப்பு மட்டும் தான் வரல மத்த படி எல்லாம் ஓகே .. ஜட்ஜ் fine  இல்ல ஜெயில் அப்டின்னு judgement குடுக்க பணம் இருந்தும் ஜெயிலுக்கு போறார் ஏன்னு கேட்டா ஒரு டயலாக் சொல்றார் ஒண்ணுமே புரில .. யாராவது கேட்டு எக்ஸ்ப்ளைன் பண்ணுங்களேன்..அப்புறம் அவர் ரிலீஸ் ஆகும் போது அந்த ஏரியாவே சேர்ந்து டான்ஸ் ஆடுது ஒரு வேல ஏரியா கவுன்சிலர் கேரக்டர்ல நடிசிருப்பரோ அப்டின்னு நெனைச்சா அதும் இல்ல அவர் ஒரு வெட்டி பையன். ஆனா அந்த ஏரியால யாராவது ஒன்னுக்கு போறதா இருந்த கூட அவர் கிட்ட  தான் சொல்லிட்டு போறாங்க அதான் ஏன்னு புரில(அது மட்டுமா..). அப்புறம் ஒரு பாசக்கார லூசு ஹீரோயின் குடும்பம் அதை explain பண்றதுக்காக  நெஞ்ச நக்குராப்ள  ஒரு செண்டிமெண்ட் சீன் அய்யோ ராமா என்ன ஏன் இப்டி படுத்துற...


ரெண்டு பொண்ணுங்களை  மூணு பசங்க கிண்டல் பண்றாங்க அதும் நம்ம ஹீரோ பாக்கும் போதே சரி  அடுத்து ஒரு சண்ட தான் அப்டின்னு நெனைச்சா அங்க தான் நம்ம டைரக்டர் நிக்கிறார் அந்த பொண்ணுங்க ஓடி போயிடறாங்க சரி சண்ட போட வேண்டாம் அப்டின்னு ஹீரோ திரும்பும் போது ஓடி போன அந்த ரெண்டு பொண்ணுங்களும் நம்ம ஹீரோயின அழைச்சிட்டு வராங்க அவுங்களும் எதோ விஜயகாந்த் கணக்கா நியாயம் கேட்க ஹீரோக்கு லவ் பொத்துகிட்டு வந்துடுது (இந்த சீன் உங்களுக்கு மொழி படத்த ஞாபக படுத்துன அதுக்கு நா பொறுப்பு இல்ல). அடுத்து ஹீரோயினோட அட்ரெஸ் வாங்க ஹீரோ ஒரு ஐடியா பண்ணுவார் பாருங்க அந்த மாதிரி யோசிச்சது  இந்தியாவுலையே.. ஏன் இந்த உலகத்துலேயே ரெண்டே பேரு தான் ஒருத்தர் G.D.நாய்டு இன்னொருத்தர் நம்ம நகுல் தாங்க .. அப்புறம் முருகா படத்துல வடிவேலு ஒரு குழந்தையோட பண்ணுனா calling bell காமெடி-ஐ திரும்ப நடிச்சு காமிச்சாங்க அந்த சீன் முடியுறதுக்குள்ள பஸ் பொள்ளாச்சி வந்துட்டு நான் அந்த பஸ்கும் சன் pictures-க்கும் ஒரு பெரிய  கும்பிடு போட்டு விட்டு நடைய கட்டினேன்...

[பின் குறிப்பு :- என்னுடைய pan card தொலைந்து விட்டது அதன் நம்பர் என்னிடம் உள்ளது . அதை எப்படி திரும்ப வாங்குவது என்று யாராவது விபரம் அறிந்த நண்பர்கள்  மெயில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்]  

Read more...

காதல் சின்னமானது எப்படி???

>> Tuesday, November 24, 2009

ஒரு நாள் கடவுள் TASMAC கடைக்கு சென்றார்.ஒரு புல் வாங்கி குடிக்கிறார் போதையே  ஏறவில்லை. மறுபடியும் இரண்டு புல் ஆர்டர் பண்ணி குடிக்கிறார் அப்பவும் போதையே ஏற வில்லை . பக்கத்தில் இருந்தவர் ஆச்சர்யத்துடன் " என்னப்பா.., 3 புல் அடிச்சும் உனக்கு போதை ஏறலையா?". அதற்கு கடவுள்"நான் கடவுள் எனக்கு போதை எல்லாம் ஏறாது"என்கிறார்.


அதற்கு பக்கத்தில் இருந்தவர் " தம்பி உனக்கு ஓவராகிடுச்சு  ஒழுங்கா வீட்டுக்கு போ"
 =================================================================================
உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ் மகாலை பற்றி சில சுவாரசியமான தகவல்கள் எனக்கு கிடைத்தன உங்கள் பார்வைக்கு அவை:-



 மும்தாஜ் ஷாஜகானின் நான்காவது மனைவி ஆவார். அவருக்கு மொத்தம் ஏழு மனைவிகள்.
ஷாஜகான் மும்தாஜின் கணவரை போர்களத்தில் கொன்று இவரை கை பிடித்தார்.இவர்களின் காதல் spot ஆக்ராவில் உள்ள மைனா பஜார் ஆகும்.
மும்தாஜ் தன்னுடைய பதினான்காவது பிரசவத்தின் போது உடல்நிலை பாதிக்க பட்டு மரணமடைந்தார்.
 இதன் மூலம் ஷாஜகானின் என்ற காதல் மன்னனின் கள்ள காதல் ... மன்னிக்கவும்  காதல்  சின்னமாக  விளங்குகிறது என்பது நமக்கு புலனாகிறது...
===================================================================================
டிஸ்கி: எதுவும் சொந்த சிந்தனை  இல்லை எல்லாம் எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் மட்டுமே... புடிச்சிருந்தா   ஓட்டு போட்ருங்கோ...

Read more...

நீயில்லையே...

>> Monday, November 23, 2009



பேசி சிரிக்கும்  போதும்...
கை தட்டி ரசிக்கும் போதும்...
விளையாடி  களைத்த போதும்...
அயர்ந்து உறங்கும் போதும்...
தனியாய் நடக்கும் போதும்...
நானாய் சமைக்கும்  போதும்...
அழகாய் இருக்கும் போதும்...
உன்  பெயரை கேட்க்கும் போதும்...
யாரோ புகழும் போதும்...
உலகின் உச்சியில் இருந்த போதும் ...
.
.
.
உள்ளுக்குள் ஓர் உறுத்தல்
என்னுடன் நீயில்லையே...


டிஸ்கி:இதை யாரேனும் கவிதை என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..

Read more...

இது தான் சச்சின்

>> Saturday, November 21, 2009

நான் மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம்..
      எங்கும் கிரிக்கெட் பத்தி தான் பேச்சு  எனக்கும் பார்க்க வேண்டு என்ற ஆசை ஆனாலும் வீட்டில் t.v இல்லாததால் பார்க்க முடியவில்லை. நீண்ட நாள் ஆவல் ஒரு நாள் நிறைவேறியது என் மாமாவுடன் அவர் நண்பர் வீட்டுக்கு கிரிக்கெட் பார்க்க சென்றேன். ஆரம்பித்து நீண்ட நேரம்  ஆகிவிட்டதென்பது அங்கு இருந்த கூட்டத்திலே தெரிந்தது. எல்லோரும் கை தட்டிய போது  நானும் தட்டினேன் எதுவும் புரியாமல்.. திடீரென எல்லோரும் கிளம்ப தொடங்கினார்கள் என் மாமாவும் என்னை கிளம்ப சொன்னார் .. ஏன் என்று கேட்ட போது " கட்டையன் அவுட் ஆகிட்டான் இனிமே தோத்துடுவாங்க " என்று சொன்னார். சொன்னதுபோலவே தோற்று விட்டனர் .அது தான் நான் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச். என்னால் மட்டும் அல்ல பலராலும் மறக்க முடியாத மேட்ச் ஏனெனில் அது 1996 உலககோப்பையின் அரை இறுதி போட்டி.. அந்த கட்டையன் யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை..



     சச்சின் டெண்டுல்கர் .... இந்த பெயரை  தெரியாமல் யாராவது இருந்தால் அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான என்று யோசிக்க வைத்து விடும்  அந்த அளவிற்கு நம்மிடையே கலந்து விட்ட பெயர் . நான் முதன் முதலில் கிரிக்கெட் பார்த்த அன்று ஏற்பட்ட பிம்பம் இன்னும் மாறவில்லை . இன்றும் ஒரு மேட்ச் நடந்தால் சச்சின் நிக்கிறானா?? என்பது தான் என்னுடைய முதல் கேள்வியை இருக்கிறது..


நான் சச்சினை பார்த்து பயப்பட போவதில்லை என்று சொன்ன ஒலங்கா-வின் பந்துகளை புரட்டி எடுத்து தன்னை பார்த்து பயப்பட வைத்தவர். சச்சினுக்காக என்னிடம் திட்டங்கள் எதுவும் இல்லை அவரும் சாதாரண batsman  தான் என்று வீர  உரை ஆற்றிய caddick  அடுத்த நாள்  இப்படி ஒருவரை  என் வாழ்நாளில் பார்த்தது இல்லை என்று சொல்ல வைத்ததும் அவர்தான்.இப்படி அவரை பற்றி புறம் கூறியவர்களுக்கு தன்னுடைய பேட்டால் பதில் சொன்னவர்.


தற்போது அவருடைய கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக அவர் 30000  சர்வதேச ரன்களை கடந்துள்ளார்..இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் 24000  ரன்கள் எடுத்து இருக்கிறார்.யாரால் முடியும் ஒருநாள் போட்டிகளில் 17,178 ரன்களும், 45 சதங்களும் 91 அரைசதங்களும் , டெஸ்ட் போட்டிகளில் 12,812 ரன்களும் 43 சதங்களும் 53 அரைசதங்களும் இனிமேல் அடிக்க .. நீங்கள் ஒரு நாள் போட்டிகளில் இருந்து எப்போது வேண்டுமானாலும்  ஓய்வு பெற்றுக்கொள்ளுங்கள் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் பாண்டிங் ஓய்வு பெற்ற பின்பே ஒய்வு பெறுங்கள் ஏனெனில் எப்போதும்   நீங்கள் தான் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும்.. செய்வீர்களா....

Read more...

எது பின்நவினத்துவம் ...???

>> Friday, November 20, 2009

       என்னுடைய போன பதிவான 2012-ம் என் ரசனையும்... என்ற  பதிவிற்கு பின்னோட்டம்  எழுதி இருந்த தோழி அன்புடன் மலிக்கா மற்றும் ஒரு அனானி நண்பரும் என் பெயரை குறித்த சந்தேகங்களை எழுப்பி இருந்தனர் . பேனா மூடி யா இல்லை பேநா மூடி யா என்று.. பேனா மூடி என்பதே சரியான வார்த்தையாய் இருக்கும் போது நான் ஏன் பேநா மூடி என்று எனக்கு நானே பெயர் வைத்து கொண்டேன் . பெற்றவர்கள் வைத்த ஆனந்த் என்ற பெயரே நல்ல தான இருக்கு அப்புறம் எதற்கு வேறு பெயர்.. ஒரு வேலை இதற்கு பெயர் தான்  பின்நவினத்துவமோ இந்த சந்தேகத்தை  நீங்கள் தான் தீர்க்க வேண்டும்(வேற வழி )...



        பின்நவினத்துவம் என்ற வார்த்தையே எனக்கு அறிமுகமாகி சில வாரங்கள் தான் இருக்கும்  அதாவது நான் பதிவுலகிற்கு அறிமுகமாகி  சில வாரங்கள் ஆகின்றன. இந்த  சிறிய காலத்தில் பின்நவினத்துவம் என்றால் கட்டுடைத்தல் அதாவது வழி வழியாக நாம் பின்பற்றி வரும் பழக்கத்தை  மாற்றி புதிதாய்  ஒன்றை பழகுவது இவ்வாறே நான் அர்த்தபடுத்தி கொண்டிருக்கிறேன்.ஆனால் எனக்கு தெரிந்து  இந்த பின்நவினத்துவம் எல்லா இடத்திலும் மிக சரியாக பொருந்திவிடுவதில்லை நம்முடைய நேபாளி படத்தை போல.அப்படியே பொருந்தி வந்தாலும் புரிவதற்கு சிரமம்  இருக்கும் irreversible மற்றும் momento படங்களை போல தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஆய்த எழுத்து படத்தை போல. 


      முதலில் நாம் வழக்கமாக செய்யும் சில விஷயங்களை எடுத்து கொள்வோம் அதில் பின்நவினத்துவத்தை புகுத்தினால் என்ன ஆகும் என்ற ஒரு ஆராய்ச்சி(வேல வெட்டி இல்லீங்கோ ). நாம் வழக்கமாய் செய்யும் விஷயங்கள் மேலே சட்டையும் கீழே பேண்டும் போடுவது , பைக்கில் முன்னால் உட்கார்திருப்பவர்    ஓட்ட  பின்னல் இருப்பவர் தேமே என்று இருப்பது, திருமணத்தில் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டுவது. இவற்றில்  பின்நவினத்துவத்தை புகுத்த  முடியுமா என்றால்...
     1 ) முடியாது.., சட்டை மேலே உடலின் அளவிற்கும் பேன்ட் கேளே உள்ள அளவிற்கும் தைக்க பட்டிருக்கும் மாற்றி போடுவது கிட்ட தட்ட immpossible .
     2 ) முடியும்.., முன்னால் இருப்பவர் சும்மா இருக்க பின்னல் இருப்பவர் பைக்கை ஓட்டுவது செய்ய கூடிய விஷயம் தான் இருந்தாலும் தேவை இல்லாதது கஷ்டமானதும் கூட. ..
     3 ) நிச்சயமாக முடியும்..,ஆனால் ஏற்றுக்கொள்ள பெரும்பாலனவர்களின் மனம் ஒப்புகொள்ளாது.
      ஆகவே  பின்நவினத்துவம் என்பது சில இடங்களில் புகுத்த முடியாததாய்   சில இடங்களில் புகுத்த முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாய் சில இடங்களில் ஏற்றுக்கொள்ள முடிந்தாலும்  புகுத்த முடியாததாய் இருப்பதாக நான் உணர்கிறேன் உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும்..

Read more...

2012-ம் என் ரசனையும்...

>> Wednesday, November 18, 2009

ஞாயிற்று கிழமை...
     எதாவது படத்துக்கு போகலாம் என்று நண்பனுடன் கிளம்பி ஆகிவிட்டது.. என்ன படத்துக்கு போகலாம் என்று முடிவு செய்ய படவில்லை.. அவன் ருத்ரம் (தமிழ்நாட்டுல இப்டி தான்  பேர் வைச்சு இருக்காங்க  ) போகலாம் என்று சொன்னான். எனக்கு போக பெரிதாக ஆர்வம் இல்லை முதல் காரணம் நான் படம் போட்டு முப்பது  நிமிடத்தில் என்னை d .v .d -ஐ தூக்கி ஏறிய வைத்த 10000 .b .c படத்தை இயக்கியவர்.. அப்புறம் தமிழ் டப்பிங்  மீதான பயம் அதற்கு முதல் நாள் இரவு நான் ரொம்ப நாள் பார்க்க வேண்டும் என்று நினைத்த the dark knight படத்தை தமிழில் பார்த்தேன் .. முதல் பேங்க் காட்சியில் நிமர்ந்து உட்கார்ந்த என்னை கவுந்து அடித்து படுக்க வைத்து விட்டது christian bale -ன் அறிமுகம்.. நல்லா  தான இருக்கும் அப்டின்னு நினைக்கறிங்களா ...ஆமா நல்லா  தான்  இருந்துச்சு....எவண்டா அவன் அவர்க்கு விஜயகாந்த் வாய்ஸ்-ல மிமிக்ரி பண்றதுக்கு ஐடியா குடுத்தது அது சொன்ன புரியாது பாத்தீங்கனா   தான் தெரியும்..



     நான் அதே நேரம் அதே இடம் போகலாம் என்று சொல்ல போன  ஞாயிற்று கிழமை பார்த்த அவன் என்னை திட்ட தொடங்க நாங்கள் ருத்ரம் படத்துக்கே புறப்பட்டோம்.. theatre  வாசலில் அவ்வளவு கூட்டம் எதோ ஒரு தளபதி படத்தின்  முதல் நாள் போல் ஒரு ஆங்கில படத்தின் மூன்றாவது நாளில் ( எல்லாம் கலைஞர் டிவி செய்த மாயம்..).எப்படியோ கடைசி மூன்று டிக்கெட்-ல் இரண்டை வாங்கி theatre  குள் நுழைந்தால் நம்ம சிநேகா அக்கா...எப்படா இவங்க ஹாலிவுட் போனாங்க அப்டின்னு பாத்தா எதோ செருப்பு விளம்பரமாம்..  என்ன கருமமோ என்று வெறி ஆகி போனால் ஸ்ரீ தேனண்டால் பில்ம்ஸ் வழங்கும் ருத்ரம் என்று ஒரு slide போட்டார்கள்.. அதன் பின்னரே columbia pictures வீடியோ போடப்பட்டது... தமிழ் நாட்டில் தமிழனுக்கு தாணே  முதல் இடம்.. படத்தின் தொடக்கம் இந்தியாவில் தொடங்குகிறது.அந்த சீன்க்கு  செம சவுண்ட்  விட்டோம்ல... நாங்கெல்லாம் derror - ல.. ஒரு இந்திய ஆராய்ச்சியாளர்  தன் அமெரிக்க நண்பரிடம்  உலகம் அழிய போவதாக கண்டு பிடித்திருப்பதாக சொல்ல அந்த தகவலோடு அமெரிக்கா பறக்கிறார் அங்கே சென்று ஒரு முக்கியமானவரை பார்க்கிறார்  அவருடன் அதிபரை பார்க்க கிளம்புகிறார்... அப்புறம் தன் பேர் போட்ராங்கோ ... 2012 


  ஏகப்பட்ட  படத்தில் படத்தில் பார்த்தது போல ஹீரோ தனியாக தூங்குகிறார் .. பாஸ் -ன் போன் வர லேட்டாக எழுந்து அவசர அவசரமாக கிளம்புகிறார்.. அப்புறம் நீங்கள் இதுவரை எந்த படத்திலும் பார்க்காத காட்சி வருது ... அட ஆமாங்க ... ஹீரோ விவாகரத்தான தன் மனைவியிடம் உள்ள குழந்தைகளை vacation -க்கு  கூட்டி செல்கிறார் .இப்படி ஒரு சீன் இதுக்கு முன்னால பாத்து இருக்கீங்களா சொல்லுங்க...அந்த vacation-ல ஒரு புத்திசாலி லூச பார்க்கிறார் அவர் மூலமாக உலகம் அழிவதையும் சைனா-வில் கட்டப்படும் கப்பலை பற்றியும் தெரிந்து கொண்டு எப்படி குடும்பத்தை காப்பாற்றினார்  என்பது தான்  கதை...ஆவ்வ்வ்வவ் ...


 உண்மைலேயே படம் visually  stunning  தான்... ச்சும்மா பிரிச்சு மேஞ்சுருக்காங்க... ஆனா சில சீன்-ல எனக்கு சிரிப்பு வந்துட்டு.. வாட் டு டூ ... அதும் பூமிக்குள்ள ஹீரோவோட வேன்  விழுந்த பிறகு அவர் எழுந்து வருவாரே வாய்  விட்டு சிரிச்சிட்டேன்.ஆனா theatre புல்லா செம கிளாப்ஸ் .. ரெண்டு பேர் என்ன முறைச்சு பாத்தாங்க.. அப்புறம் எப்டிங்க அவர் நகர்ந்த உடனே எல்லாம் பொளக்குது இதுவே விஜயோ .., விஜயகாந்தோ பண்ணி இருந்த நம்ம ஆளுங்க விழுந்து விழுந்து சிரிப்பாங்க ஆனா ஒரு வெள்ளக்காரன் பண்ணுனா வாய பொளந்துகிட்டு பாப்பாங்க ...என்ன கொடுமையோ போங்க..

யாருங்க அந்த அமெரிக்கா ஜனாதிபதி ... ச்சும்மா ஒரு ரூபா குடுத்த ஒன்பது ரூபாய்க்கு நடிக்கிறாரு.. ச்சும்மா அப்டியே புளியிராருங்க.. எப்டி தான் roland emmerich படத்துல மட்டும்   அமெரிக்கா ஜனாதிபதி எல்லாம் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களோ  தெரில...( independance day மறந்த்ருக்க மாட்டிங்கன்னு   நெனைக்கிறேன்).என்னடா நம்ம ஹீரோ மனித குலத்தை காப்பாத்தாம அவர் குடும்பத்த மட்டும் காப்பதுறாரே என்று பார்த்தால் ஹீரோ எழுதிய புக்க படிச்சு கடைசில படிச்சு காமிக்கிறார் அந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்  உடனே அந்த கப்பலோட கதவ தொறந்து எல்லாத்தையும்  எத்திக்க்றாங்க அதனால நெறைய பேர் உயிர் காப்பத்த படுது ..அங்க நிக்றார் நம்ம டைரக்டர்..


குளோபல் communication வேல செய்யல அப்டின்னு பாதி படத்துல சொல்றங்கோ.. ஆனா சாக போற நம்ம இந்திய ஆராய்ச்சியாளர் சாகுறவரைக்கும் எப்படி போன்ல பேசிட்டே இருக்கார்..எப்டின்னு நா கேக்கமாட்டேன்..உண்மையா சொல்லனும்னா எனக்கு படம் பிடிக்கவே இல்ல.. படம் முடிஞ்சதும் பெரும்பாலானோர் திருப்தியாக வெளிய வர நான் மட்டும் குருவி பார்த்த effect -ல் வந்தேன்..என் ரசனை தான் மழுங்கி போச்சோ அப்டின்னு நெனைச்சப்போ   படம் எப்டின்னு போன் பண்ணின நண்பனிடம் மொக்க போகாத அப்டின்னு நா சொல்லறத பாத்த ஒருத்தர் என்ன முறைச்சிட்டு அவர் போனை எடுத்து யாருக்கோ போன் பண்ணி படம் சூப்பர் இன்னொறு தடவ போகணும் அப்டின்னு சொல்லிக்கிட்டே போய்ட்டார்.. ஆமா என்னோட ரசனை ஏன் இப்டி மழுங்கி போச்சி...

டிஸ்கி: இந்த படத்துல  2012-ல இந்தியாவுல எல்லாரும் செத்துறதா காட்றாங்க.. அப்டின்னா 2020 - ல நாம வல்லரசாக மாட்டோம் அப்டின்னு சொல்லி இந்தியாவ கிண்டல் பண்றாங்களோ ...

Read more...

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை (பகுதி 2 )

>> Tuesday, November 17, 2009

இந்த பதிவை தட்ட தொடங்கும் முன்னர் வரை இதன் போன பகுதிக்கு 34  ஓட்டுக்கள் விழுந்திருந்தது ... நன்றி.. நன்றி... நன்றி... படம் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..



 போன பதிவில் இந்த படத்தின் கதையை உங்களுக்கு விளக்குவதாக கூறியிருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான விஷயம் படத்தின் genere. இதில் தான் இயக்குனர் தன் திறமையை காட்டி உள்ளார்.படத்தை ஒரு கோணத்தில் பார்த்தல்  romance,thriller,action,adventure,horror,comedy( black,white,red என்று இதில் எல்லா வகைகளும்).,என்று எந்த genere குள்ளும் படம் வராது.. இதுவே மற்றொரு கோணத்தில் பார்த்தல் படம் இந்த எல்லா genere குள்ளும்  அடங்கும்...அப்படி ஒரு திரை கதை நேர்த்தி....

எவ்வளவு தான் என் மூளையை கசக்கினாலும் அந்த கதையை எப்படி விளக்குவது என்பது தான் எனக்கு இன்னும் பிடி படவே இல்லை.. இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளை மட்டும் விளக்குகிறேன்..
          ஒரு காட்சியில் விபச்சாரம் செய்ய மும்தாஜ் வற்புறுத்த பட்டு காலில் சூடு வைக்க படுவார்.அதன் வலியை மறப்பதர்காகவே அவர் இது வரை தொட்டு கூட பேசாத நாயகனின் போஸ்டரில் படுத்து தூங்குவாள்.மறுபடியும் அரங்கத்தில் பெரும்பாலனவர்கள் கண் கலங்கி போனார்கள்.இதன் மூலமாக தொட்டால் வருவது காமம் தொடாமல் வருவது காதல் என்ற புனிதமான கருத்தை பதிவு செய்கிறார்.. இப்படி நிறைய நிறைய...


        இந்த படம் வெற்றி பெறாமல் போனதால் இதில் உள்ள சில நல்ல காட்சிகள் பல திரை படங்களில் திருட பட்டன... உதாரணம்:- படையப்பா படத்தில் அந்த ஊஞ்சலில் ரஜினிகாந்த் அமரும் காட்சி. இந்த படத்தில் தனக்கு இடம் தராத வில்லியை எழுந்திரிக்க வைத்து அதே சோபாவில் அமருவார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த படம் வருவதக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே இது திருடப்பட்டது என்பது...

            இவ்வளவு  விஷயம் சொல்லிவிட்டேன் நாயகனின் கதாபாத்திரத்தை உங்களுக்கு சொல்லவில்லையே.. இந்த படத்தில் இவர் ஒரு வக்கீல் , எம்.எல்.ஏ , 33  எம்.எல்.ஏ கொண்ட கட்சியின் தலைவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவு தருபவர், ரவுடி,தாத்தா மன்னிக்கவும் தாதா இப்படி பல கதாபாத்திரங்களை தொழில் சுமந்திருக்கிறார்.. 10 வேடமிட்டு 10 கதாபாத்திரங்கள் செய்வது திறமை அல்ல ஒரே வேடத்தில் அத்தனையும் செய்வது தான் திறமை.
            மும்தாஜ் திருமணம் செய்துகொள்ளும் அந்த ரவுடி ( ஐயையோ .. கதைய சொல்லிட்டேனே..)  அவளை அடைய முயற்சி செய்வதும் அதற்க்கு எந்த response - உம் இல்லாமல் மரக்கட்டை போல் இருக்கும் மும்தாஜ்... என்ன ஒரு முற்போக்கு சிந்தனை இதற்கு பேர் தான் தெய்வீக காதல்  .. மறுபடியும் முடிகள் எல்லாம் நட்டு கொள்கின்றன..
படம் பப்படம் ஆனாலும் எல்லோராலும் பெரிதும் பேசப்பட்ட விஷயம் நாயகனின் நடனம்..அத்தனை பாடல்களுக்கும் நாயகியை தொடாமல் அவர் புடவையை பிடித்து கொண்டோ இல்லை பாவாடையை பிடித்து கொண்டோ அவர் ஆடும் ஆட்டம் இதுவரை வெள்ளி திரை காணதது...

படத்தின் உச்ச கட்டம் என்பது கடைசி காட்சியாக மட்டும் இல்லாமல் படத்தின் சிறந்த காட்சியாகவும் அமைய வேண்டும்.துரதிஷ்டவசமாக எல்லா படங்களுக்கும் அப்படி அமைவதில்லை இந்த படத்தில் அப்படி அமைந்திருப்பது அதன் சிறப்பாகும்.தன் தங்கையின் கழுத்தில் கதி வைக்க பட்டதும் அவர் ஒரு கையில் அருவாளும் இன்னொறு கையில் தனது வேஷ்டியை அவிழ்த்து வைத்து கொண்டு வெறும் பட்டாபட்டி உடன் அவர் போடும் ஆட்டம்  வெறும் ஆட்டம் அல்ல தாண்டவம்.. ருத்ரதாண்டவம்..
அந்த சண்டைக்கு பிறகு வரும் அந்த காட்சி திரையை விட்டு மறைந்தாலும் நம் கண்ணை விட்டு மறைய மறுக்கிறது(அப்பாடி இங்க கதைய சொல்லல...). அந்த காட்சிக்கு அழாதவர்கள் கண்ணீருக்கும் கண்ணுக்கும் சம்மந்தம்  இல்லாதவர்கள்.. கல்லால் செய்யப்பட்ட இதயம் கொண்டவர்கள்..
         இந்த படம் வந்த காலத்தில் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தொலைகாட்சியில் வெகுஜன மக்களால்  பார்க்கப்பட்டு.. ஈர்க்கப்பட்டு .. கல்ட் தகுதியை பெற்றது...இனிமேலாவது இது போன்ற தலை சிறந்த படைப்புகளை அரங்கத்தில் கண்டு வெற்றியடைய வைக்குமாறு  கேட்டு கொள்கிறேன்.. நன்றி.. வணக்கம்...

Read more...

நண்பர்களே உங்களுக்கான ஒரு போட்டி...

>> Saturday, November 14, 2009

என்னுடைய வீராசாமி படத்தின் விமர்சனத்துக்கு நினைத்ததை  விட நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.. நன்றி நன்றி... இப்போது உங்களுக்கு ஒரு போட்டி... கீழே இருக்கும் வீடியோ-ஐ
பாருங்கள்...


போட்டி அவ்ளோ தான் முடிஞ்சிது ... இத முழுசா  பாத்தும் நீங்க  சிரிக்கலைன்னா  குட்டி நரசிம்ம ராவ்  அப்டின்னு நீங்களே  உங்களுக்கு ஒரு பட்டம் குடுத்துக்கலாம்.. அப்டியே எல்லார் போலவும் டாக்டர் பட்டமும் போட்டுக்கலாம் ... சிரிச்சி இருந்திங்கன்னா ஓட்ட போட்டுட்டு டாட்டா காமிச்சிட்டு போகவேண்டியது தான்.. டாட்டா பாய் பாய்....

டிஸ்கி: இதை நீங்கள் பார்ப்பதால்  ஏற்படும் பாதிப்புக்கு  நான் பொறுப்பல்ல .......

Read more...

வீராசாமி என்னும் உலக சினிமா - ஒரு பார்வை

>> Friday, November 13, 2009


             நல்ல சினிமா என்பதே அது வெளியாகும் காலத்தில் யாரும் சீண்டாமல் தோல்வி அடைவதும் கொஞ்ச நாள் கழித்து அதை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவதும்  என்று ஆகிவிட்டது  .இதற்கு கமல் ஹாசன் , பாலு மகேந்திர போன்றவர்களின் படங்களே உதாரணம்.தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல ஹாலிவுட்-ல் கூட இந்த வரலாறு உண்டு குறிப்பாக imdb வெப்சைட்-ல் சிறந்த படங்களின் வரிசையில் முதல் இடத்தில இருக்கும் the  shawshank  redembtion மற்றும்  Reservoir  dogs , momento  போன்ற படங்கள் வெளியான போது யாரும் சீண்டாமல் தோல்வி அடைந்து பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் படம் தான் வீராசாமி.


          இந்த படத்தில் தங்கைக்காகவும் லட்சியதிர்காகவும் வாழ்ந்து மறைந்த ஒரு அரசியல்வாதியின் கதை.படத்தின் ஆரம்பம் முதலே நம்மை படத்தின் உள்ளே இழுத்து கொள்ளும் திரைக்கதை,வெளியே வர முடியாமல் உள்ளேயே தங்க வைக்கும பின்னணி இசை,விளிம்பு நிலை மக்கள் முதல் அதிகாரம் மிகுந்த அமைச்சர் வரை என்று எல்லா தரப்பினரையும் விவரிக்கும் பாத்திர படைப்புகள் இன்னும் என்ன என்ன ....


           படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அதிக  வட்டிக்கு கடன் வாங்கி நடுத்தர மக்கள் எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை விவரிக்கிறார் இயக்குனர் ,அதிலும் குறிப்பாக வில்லியாக நடித்த நடிகை கண்களில் அப்படி ஒரு கொடுரம் நிச்சயம் த்ரிஷா,தமனா போல் பெரிய நடிகையாக வரும் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த கொடுமையை தட்டி கேட்கும் நாம் ஹீரோ தன்னுடைய இயல்பான சண்டை அசைவுகளால் நம்  மனதை தொடுகிறார்.அதிலும் அந்த சண்டைக்கு நடுவிலேயே வரும் காதல் காட்சியை பார்க்கும் போது  நம் உடலில் உள்ள முடிகள் எல்லாம் நேராக நிற்கின்றன அதாவது புல்லரித்து  விட்டது..


         அதன் பிறகு பொது இடத்தில் சிறு நீர் போறவனையும்  , பாக்கு போடுபவனையும் ,  லஞ்சம் வாங்குபவர்களையும் நகைச்சுவையாக அவர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்   தண்டிப்பது சிரிப்பை வர வளைத்தாலும்   அதன் உண்மை நிலை நம் நெஞ்சை  சுடுகிறது.அடுத்த காட்சியில் ஜீன்ஸ் கேட்கும் தான் தங்கையிடம் சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை கூறும் போது அரங்கில் இருந்த 1000  பேரில் குறைந்தது 400 பேராவது அழுதிருப்பார்கள்.அதிலும் முக்கியமாக நம் நாயகனின் முக பாவனைகள் குறைவும் இல்லாமல் அதிகமும் இல்லாமல் நிறைவாக உள்ளது.தேசிய விருதில் அரசியல் உள்ளது என்பதை இவருக்கு விருது கிடைக்காத போதே தெரிந்து கொண்டேன்.

         படத்தில் என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் மும்தாஜ் தான்.ஒரு விபச்சாரியின் மகளாக பிறந்தும் தவறாக வாழாமல் உழைத்து வாழும் ஒரு விளிம்பு நிலை பாத்திர படைப்பு. ப்ளாக் டிக்கெட் விற்றாவது உழைத்து வாழ வேண்டும் என்னும் அவர் கொள்கை   2  வேலை சோற்றுக்காக விபச்சாரம் செய்யும் நடிகைகளுக்கு ஒரு படம்.அதை விட அவர்க்கு நாயகன் மேல் காதல் தோன்ற காரணமாக சொல்லப்படும் அந்த மாலை போடும் காட்சி. அப்பாடி... அதை பார்த்தும்  மறுபடியும் என் முடியெல்லாம் நேராக நின்று கொண்டது.
       படத்தில் மற்றொரு முக்கியமான பாத்திரம் நமது ஹீரோவின் தங்கையின் காதலுனுடையது.அவர் யார் என்று பார்த்தோமே ஆனால் அவர் தான் அந்த வட்டிக்கு விடும் வில்லியின் தம்பி.இருவருக்கும் காதல் வரும் காட்சியில் அந்த பெண்ணின் கண்கள் படபடப்பது கவிதை போல படமாக்க பட்டுள்ளது.


       படத்தின் மற்றொரு சாராம்சம் ஹீரோ அண்ட் ஹீரோயின் காதல் காட்சிகளில் தொடவே மாட்டர்கள். படத்தின் போட்டோ போடும் போதே ஹீரோயின் உதட்டை கடிப்பவர்கள்  இந்த படம் பார்த்தாவது திருந்த வேண்டும்.திருந்துவார்களா ...
       படத்தின் கதைக்கே போக வில்லை அதற்குள் இந்த பதிவு பெருசாகி விட்டது ஆகவே அடுத்த பதிவில் இந்த விமர்சனம் தொடரும்...தொடரும்....தொடரும்... இன்னும் படம் பார்க்காதவர்கள்  அடுத்த பதிவு போடுவதற்குள் படம் பார்த்து விட்டால் சிறப்பு..


 

Read more...

இது தான் தமிழ்...



1 = ஒன்று -one
10 = பத்து  -ten
100 = நூறு  -hundred
1000 = ஆயிரம்  -thousand
10000 = பத்தாயிரம்  -ten thousand
100000 = லட்சம்  -hundred thousand
1000000 = பத்து லட்சம்  - one million
10000000 = கோடி    -ten million
100000000 = அற்புதம்  -hundred million
1000000000 = நிகற்புதம்  - one billion
10000000000 = கும்பம்  -ten billion
100000000000 = கணம்  -hundred billion
1000000000000 = கற்பம்  -one trillion
10000000000000 = நிகற்பம்  -ten trillion
100000000000000 = பதுமம்  -hundred trillion
1000000000000000 = சங்கம்  -one zillion
10000000000000000 = வெள்ளம்  -ten zillion
100000000000000000 = அன்னியம்  -hundred zillion
1000000000000000000 = அர்த்தம்  -??????
10000000000000000000 = பாரர்த்தம்    -- ????????
100000000000000000000 = பூரியம்  ---????????? ?????
1000000000000000000000 = முக்கோடி  -??????????? ???????
10000000000000000000000 = மகாயுகம்  -யாரவது இருக்கிங்களா  ??????



Read more...

பாண்டா கரடியின் பிறப்பும் வளர்ச்சியும் ..

>> Thursday, November 12, 2009


 
 
 
 
 
 

[ சிரிக்க... சிரிக்க ... சிரிக்க மட்டுமே.. சிரிச்சவங்க எல்லாம் ஓட்டு போட்ட்ருங்கப்பா...] 

Read more...

வெட்கம் கெட்ட டோனி அண்ட் கோ

>> Wednesday, November 11, 2009


ஹைதராபாத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா  வீழ்ந்தது இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத சோகமாக உள்ளது. ஆனால் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், கேப்டன் டோணியும், சக வீரர்களும் அன்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ஒரு இடத்தில் கூடி குடித்து, கும்மாளமிட்டு கொண்டாட்டமாக இருந்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மிகப் பரபரப்பான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்து. இதனால் ரசிகர்கள்  பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

அன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புயலாக ஆடி 175 ரன்களை விளாசினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் இந்தியா வென்று விடும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இதயம் பட படக்க போட்டியைப் பார்த்தனர். ஆனால் இந்தியாவின் தோல்வி அவர்களை நொறுங்கிப் போகச் செய்தது.

இந்தத் தோல்வியால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான பழம்பெரும் பத்திரிக்கையாளரான பிரபாஸ் ஜோஷி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆனால் இப்படியெல்லாம் ஒருபக்கம் சோகங்கள் உலவிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் தங்களது கேப்டன் டோணி தலைமையில், தோல்வி குறித்து கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல் பார்ட்டியில் கலந்து கொண்டு குடித்துக் கொண்டாட்டமாக இருந்துள்ளனராம்.

இதுகுறித்து சேனல் நியூஸ் எக்ஸ் என்ற தனியார் தொலைக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் டோணியும், வீரர்கள் சிலரும் ஜாலியாக இருப்பது போல உள்ளது.அவர்களுடன் ஆண்கள், பெண்கள்  ஏராளமானோர் உள்ளனர்.

டோணியுடன் வீரேந்திர ஷேவாக், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நேஹ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காணப்புடகின்றனர்.

குடி, கொண்டாட்டம், ஆட்டம், பாட்டமாக அந்த விருந்து நடந்ததாம்.

இது கிரிக்கெட்  ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து முன்னாள் மும்பை கிரிக்கெட் வீரர் ராம்ஜி தரோத் கூறுகையில் இந்தப் படங்கள் உண்மையானவை என்றால் அது மிகவும் சோகமானது. ஒரு கேப்டனுக்கு இப்படிப்பட்ட புகைப்படங்கள் நல்ல பெயரை வாங்கித் தராது என்றார் அவர்.இதை பற்றிய உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யுங்கள்..

Read more...

வருங்கால சி.எம் விஜய் வாழ்க


courtesy:tamilcinema.com
நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடடேண்னே நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்.
எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்துக்கெல்லாம் நீ ஏண்ணா ராகுல போய் பார்க்கற...? அவரு வருவாரு பாரு... நம்பளை தேடி...
நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு... நீ எந்த தொகுதில நின்£லும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்... ஆனா, நம்ம ச.மு.க. கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா... (நம்ம கட்சி பேரு ச.மு.க.ன்னேன்... சந்து முன்னேற்ற கழகம்...)
நீ மத்திய சென்னைல நில்லு... ஏன்னு கேளு, சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்.. புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீக்கர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க, பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே... கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம். உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னுகூட அவசியம் கெடயாது... ஒரு பிரச்சனை முடிஞ்சிது... இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்... நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்... ரமணாவ பாபனாசத்துல, விக்ரமன உடுமலைபேட்டைல, என்னது கௌதம் மேனன்க்கா... என்ன பேசற நீ... அவர்லாம் ஒரு டைரக்டர்... ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...? வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்... இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு... மிச்சத்த அப்புறம் ஷோபா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்...
இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுகவ என்ன பண்றதுனுதான். நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்க்கறேன்.. ஒரு வோட்டுதான் வெச்சுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது.. அந்தாளு மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமே ஜ டேமேஜ் பண்ணிடுவாரு.. ஆக கடைசி பிரச்சனை திமுக?. நம்மல்லாம் பொறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்.. ஆனா, அவங்கே அரசியல் பன்றதுகுன்னே பொறந்தவங்கே... அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மோதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே... அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.அப்பா அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்...


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... நம்ம ஆட்சிக்கு வந்தோம்ன்னா அந்த சொம்பு வந்து நம்மளோட சேர பார்ப்பாரு... ஆனா அவர சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன். அவரு போன படத்துல உன்ன கலாசிட்டாருங்ண்ணா... நான் குருவி இல்ல.. பில்லான்னு சொல்லிட்டாரு... அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம். விடலாமா? அத... நசுக்கறோம்... அவரு மட்டும்தான்னா நமக்கு காண்டு... மத்த எல்லாரும் நல்ல பசங்க... இவர மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தாருன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..
அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு தெறந்து காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா...

[ இது சிரிக்க மட்டுமே..அப்பால  சிரிச்ச எல்லாரும் கண்டிப்பா ஓட்டு போட்ருங்கோ]

Read more...

தூங்கவைத்த இளையராஜா...

>> Tuesday, November 10, 2009

     நான் கல்லூரி செல்லும் வரை  பாடல் கேட்கும் பழக்கமே  இல்லை. அப்படியே கேட்டாலும் அது அப்போதைய ஹிட் பாடலாகவே இருக்கும்( ஓ.. போடு.. மன்மதராசா வகையறாக்கள் ). சன் மியூசிக் சேனல் ஆரம்பித்த போது பாட்டுக்கெல்லாம் ஒரு சானலா என்று திட்டி இருக்கிறேன்.கல்லூரிக்கு சென்ற பின் எல்லோருடனும் சேர்ந்து பாடல் கேட்க ஆரம்பித்தேன் .பழைய பாடல்கள் பிடிக்காது (கண்ணே கலை மானே போன்ற விதி விலக்குகளை தவிர).குறிப்பாக ரஹ்மான் பெரிதாக கவர்ந்தார் கொஞ்ச காலத்தில்  என்னை முழுவதுமாக ஆட்சி செய்ய தொடங்கினார் என்றே கூறலாம் .




   பின் ஒரு இனிமை இல்லாத  நாளில் தூக்கம்  வராமல் நிலவை துணைக்கு அழைத்து கொண்டிருந்தேன் என் வெறுமையை போக்க.. அப்போது என் நண்பன் அவன் செல்லில் sleeping songs அப்டிங்கற foldar-ல் இருக்கும் பாடல்களை கேட்டால் தூக்கம் வரும் என்று சொல்லி கொடுத்தான் முதல் படலை கேட்டதும் தூங்கி விட்டேன்.அப்போது தான் இளையராஜாவின் ஆளுமை புரிய தொடங்கியது.அதன் பிறகு தூக்கம் வராத இரவுகள் எத்தனையோ அதில் எல்லாம் தூங்க  வைத்தவர் இளையராஜா . அதில் முதன் மையானது அன்று கெட்ட அந்த முதல் பாடல்.அந்த பாடல் "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு". இளையராஜா சார் U ARE GREAT!!!




அந்த பாடல் உங்களுக்காக இந்த படலை கூட வெறுப்பவர்கள் இருப்பார்கள என்ன......


ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

Read more...

கமல் மற்றும் பலர் ..

>> Saturday, November 07, 2009

          இன்று நவம்பர் 7 2009.......  55 வருடங்களுக்கு முன்னால் பரமகுடியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது ... அந்த  குழந்தையின் பெற்றோர்கள் அதற்கு கமல் ஹாசன் என்று பெயரிட்டனர்...
       5 வருடங்களுக்கு பின் ....
களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம் ..அதில் 5  வயது சிறுவனாக அறிமுகம்..
இந்தியாவிலேயே ஏன் உலக சினிமா வரலாற்றிலேயே சினிமா சார்பில்லாத 5  வயது சிறுவன் அறிமுகமான போது  இன்னார் நடிக்கும் படம் என்று படத்தின் பெயர் போடும் முன்பு போட்டிருக்க மாட்டார்கள். அப்படி போட்ட ஒரே படம் களத்தூர் கண்ணம்மா.. போட பட்ட ஒரே நடிகர் நமது உலக நாயகன் கமல் ஹாசன்..


   அன்று தொடங்கிய கலைபயணம் இன்று வரை நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும், நவீனத் தொழிட்நுட்பங்களை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும், உருப்படியான சினிமாவுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீவிரமாக பாடுபடும் மிக மிக அரிதான தமிழ் சினிமாக்காரர் கமல் ஹாசன் .

 
          இது கமல்ஹாசனின் திரையுலக பொன்விழா. வயதிலோ 55, செயலிலோ 25 அளவில் அசுர வேகத்தில் இருக்கும் கமல்ஹாசன், சினிமாவை மட்டுமே நேசிப்பவர், சுவாசிப்பவர்.தனது பிறந்த நாளை பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல்,  ரசிகர்கள் செய்யும்  சில நற்பணிகளுடன் கொண்டாடுவது கமல்ஹாஸன் வழக்கம். ரத்ததானம், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள், மாணவர்களுக்கு கல்வி  உதவிகள் இப்படித்தான் பெரும்பாலும் அவரது உதவிகள் அமையும். இந்த ஆண்டும் அப்படியே.



இந்தப் பொன் விழா பிறந்த நாளில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம், அவரது உன்னைப்போல் ஒருவன் படத்தின் வெற்றி . இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட, படம்தான் என்றாலும், இந்த ஒன்றரை மணிநேர படத்தை மக்கள்  ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக் கொண்டது, மேலும் சில புதிய முயற்சிகளில் கமல் உற்சாகமாக ஈடுபட உதவியிருக்கிறது. இதுவரை சாதித்தவை ஒன்றுமே இல்லை என்றும், இனி சாதிக்கப் போகிறவைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அடக்கமாக கூறி அடுத்தடுத்து சாதனைகளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்த உதாரணக் கலைஞனை வாழ்த்துவோம்.
   இன்று உலக நாயகனுக்கு மட்டும் அல்ல மற்ற திரை நட்சத்திரங்களுக்கும் பிறந்த நாள் அவர்களையும் வாழ்த்துவோம்...

    வெங்கட் பிரபு..டாப் 10  இயக்குனர்களுள் ஒருவர். இரண்டே படங்கள் தான் இயக்கி இருந்தாலும் அவைகளின்  வெற்றி இவரை ஒரு யூத் இகானகவே மாற்றி இருக்கிறது.. எனக்கு இவரிடம் பிடித்த விஷயம் காப்பி அடித்தாலும் அதை மேடையிலையே ஒத்து கொள்ளும் தைரியம்(நிறைய பேரிடம் காண முடியாதது). இவர் பல்லாண்டு வாழ்ந்து நெறைய வித்யாசமான படங்கள் தர வேண்டும் என்று வாழ்த்துவோம்..

 
     நந்திதா தாஸ் ... அழகி , கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மேம்பட்ட நடிப்பை வெளி படுத்தி இருந்தாலும் த்ரிஷா,நமீதா,ஸ்ரேயா  போன்றவர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாததால் தமிழ் சினிமாவை விட்டு காணமல் போனவர்.. இவரும் நடிப்புலகில் பல சாதனை புரிய வாழ்த்துவோம்..

       அனுஷ்கா.. இவரை ரெண்டு படத்தில் பார்த்து இருந்தாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அருந்ததி மூலம் தான் அனைவர்க்கும் தெரியும் .. இப்பொது வேட்டைக்காரன் , சிங்கம் போன்ற கலை படங்களில் தன்னுடைய திறமை காட்டி தமன்னா , நயந்தாரா போன்றவர்களுடன் மல்லு கட்ட இருக்கிறார்..இவரும் சிறப்பான ஆண்டு அமைய வாழ்த்துவோம்...

                

Read more...
Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP